அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர் பி.கே.ஸ்ரீமதி, பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே, சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கீர்த்தி சிங் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை
காரம் கோரும் மனுக்கள் மீதான தனது தீர்ப்பில், தன்பாலின திருமணங்கள் செய்து கொள்வதால் ஏற்படும் பயன்களை விளக்கிவிட்டு, அத்தகைய திருமணத்தை செய்து கொள்ளவோ அல்லது சேர்ந்து வாழ வோ ‘அடிப்படை உரிமை’ இல்லை என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது ஏமாற்றமளிக்கிறது. மிகப் பெரிய பின்னடைவு
எல்ஜிபிடிக்யூ+ எனப்படும் பால் புதுமையர் தம்பதிகள் சட்டத்தால் தம்பதியராக அங்கீகரி க்கப்படாததால் தங்களது அன்றாட வாழ்வில் பல்வேறு வடிவங்களிலான பாரபட்சத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கு இத்தீர்ப்பு மிகப் பெரிய பின்னடைவாகும்.
ஒரு குடும்பத்தை உருவாக்குவது, குழந்தை களை தத்தெடுப்பது, பல்வேறு சூழல்களில் ஒருவரை மற்றொருவர் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கான சட்டப்பூர்வமான உரிமை ஆகியவற்றோடு, பணிக்கொடை ஓய்வூதியம், வாரிசுரிமை மற்றும் இதர பணப்பயன்களை பெறுவதற்கான உரிமையையும் இத்தீர்ப்பு மறுக்கிறது.
வெளிநாட்டைச் சார்ந்த எல்ஜிபிடிக்யூ+ இணையர் ஒருவருக்கு இந்தியாவில் வசிக்கும் உரிமை கூட கிடையாது. தங்களது அன்றாட வாழ்வில் வன்முறை மற்றும் ஒடுக்குமுறை போன்ற பல்வேறு வடிவங்களிலான பாரபட்சங்களை இத்தம்பதியினர் தொடர்ந்து எதிர்கொள்வார்கள் என்பதையே ‘சட்டரீதியான அங்கீகாரம் இல்லை’ என்பது குறிப்பிடுகிறது.
தன்பாலின திருமணம் செய்து கொண்ட தம்பதியினருக்கு எதிரான பாரபட்சங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதை, இவ்வழக்கை விசாரித்த உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வின் அனைத்து நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டனர். எனினும், இவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வதற்கான உரிமைக்குக் கூட, இது குறித்த சட்டத்தை அரசு நிறைவேற்றுவதன் மூலமே சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை அளிக்க முடியும் என நீதிபதி எஸ்.ஆர்.பட் தலைமையிலான பெரும் பான்மை தீர்ப்பு குறிப்பிடுகிறது.
பெரும்பான்மை தீர்ப்பு சரியா?
ஒரே பாலினத்தை சார்ந்தவர்களிடையே காதலும், தோழமையும் இருப்பது இயற்கை யானதே ஆகும். மேலும், வழக்கத்திற்கு மாறாக இருக்கும் இத்தகைய பால் புதுமையர் எதிர்கொள்ளும் பாரபட்சங்களை முடிவுக்கு கொண்டு வருவது அரசின் கடமை என அங்கீ கரித்து ஏற்கனவே நவ்தேஜ் ஜோஹர் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பைத் தாண்டி தற்போதைய தீர்ப்பு வேறெதையும் குறிப்பிடவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தை மீறி பாரபட்சமான நிரந்தர விதியை ஏற்படுத்த தன்னால் இயலாது என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிட்டதன் மூலம், அரசியலமைப்புச் சட்டம் தனக்கு அளித்துள்ள அதிகாரங்களை மிகக் குறு கிய மற்றும் சட்ட நுணுக்கம் சார்ந்த கண்ணோட்ட த்தோடு உச்சநீதிமன்றம் பார்த்துள்ளது. தலைமை நீதிபதியும் கூற மறந்தது..
‘‘ஓர் உறவு பாரபட்சமாக நடத்தப்படும் எனில் ஒரு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்ப தற்கான சுதந்திரம் மற்றும் அவர்களது தோழமையால் இன்புறுவதற்கான சுதந்திரம் ஆகியன பயனற்றதாகப் போகும்’’ என தலை மை நீதிபதி சந்திரசூட் அவர்களது சிறுபான்மை தீர்ப்பு அங்கீகரிக்கிறது. இதன் மூலம், தன்பாலின தம்பதியரை கணவன்-மனைவி யாக அங்கீகரிப்பதற்கான உரிமையை மட்டுமே அளிக்கிறது. ஒருவர் தனது துணையை தேர்ந்தெடுப்பதற்கான திறனையும், ஒன்றாக சேர்ந்து வாழ்க்கையை அமைப்பதையும் அர சியல் சாசனத்தின் பிரிவு 21ன் கீழும், சமத்து வத்திற்கான உட்பிரிவு உள்ளிட்டு அரசியல் சாசனத்தில் உள்ள இதர பல பிரிவுகள் வரை யறுத்துள்ளபடியும் அவர் அங்கீகரித்துள்ளார். அதே நேரத்தில், இதன் காரணமாக தன்பாலின தம்பதியருக்கு திருமணம் செய்து கொள்வதற்கான உரிமை உள்ளது என்று குறிப்பிடாமல் விட்டு விட்டார். ஆண்-பெண் ஆகிய இருபாலினத்தவர் அல்லாத ஒரே பாலின தம்பதியினரின் திருமணத்தை அனுமதிக்காத சிறப்புத் திருமணச் சட்டத்தை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், மனுதாரரின் உரிமைகளை நிந்திப்பதாக அது உள்ளது என்றும் குறிப்பிட அவர் மறுத்துவிட்டார்.
முக்கியமாக, பல்வேறு நூல்களை மேற்கோள் காட்டி, தன் பாலின காதல் இயற்கை யானது என்றும் காலங்காலமாக நடைமுறை யில் இருந்துள்ளது என்றும், இந்தியாவில் இன்று அனைத்துப் பிரிவினரிடமும் இத்தகைய வழக்கம் உள்ளது என்றும் தலைமை நீதிபதியும் இன்னொரு நீதிபதியும் அளித்த சிறுபான்மை தீர்ப்பு குறிப்பிடுகிறது. இத்தகைய உறவுகள் மேல்தட்டு பிரிவினரிடம் மட்டும் காணப்படும் நிகழ்வுகள் அல்ல என்றும், நகர்ப்புறம், கிராமப்புறம் என இரண்டிலும் இவை உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது. இத்தகையதொரு உறவையும், இது போன்றதொரு நிலையான உறவிலிருந்து கிடைக்கும் உரிமைகளையும் அரசு அங்கீரிக்க வேண்டும் என்றும் இத்தீர்ப்பு குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு சொன்ன பிறகு, இத்தகைய தம்பதியினருக்கு கிடைக்க வேண்டிய பயன்களுக்கான வாய்ப்பை ஒன்றிய அரசின் அமைச்சரவையின் தலைமையில் அமைக்கப்படவுள்ள குழுவிடம் அந்த இரு நீதிபதிகளும் விட்டுவிட்டனர். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் குறிப்பிடப் பட்டுள்ள மனுதாரர்களின் உரிமைகள் பற்றி நிபுணர் குழுவால் விவாதிக்கப்பட்டு, நாடாளு மன்றத்தால் முடிவெடுக்கப்பட வேண்டும் என நீதிபதி பட் அவர்களின் பெரும்பான்மை தீர்ப்பும் விட்டுவிட்டது.
தலைமை நீதிபதியின் வழிகாட்டுதல்கள்
இத்தகைய தம்பதியினருக்கு எதிரான வன் முறையையும், பாரபட்சத்தையும் கையாளுவதற் கான ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்களை ஒன்றிய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் அளித்துள்ளார். இத்தகைய தம்பதி யருக்கு பாதுகாப்பளிப்பதோடு, இவர்களது குடும்ப உறுப்பினர்கள் இவர்களுக்கு தொல்லை கொடுப்பதை அனுமதிக்காமல் இருக்க காவல்துறைக்கும் இவர் உத்தரவிட்டுள்ளார். இத்தகைய தம்பதியருக்கு தேவைப்பட்டால் தங்குவதற்கான பாதுகாப்பு இல்லங்களை அமைக்கவும் வற்புறுத்தியுள்ளார். அரசால் அமைக்கப்படவுள்ள குழுவானது இத்தகைய பிரிவைச் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் இதர நிபுணர்களோடு ஒருங்கிணைந்து செயலாற்றிட வேண்டும் என்றும் இவர் குறிப்பிட்டுள்ளார். ரேஷன் அட்டை, கூட்டாக வங்கிக் கணக்கு துவக்குவதற்கான வசதி, இத்தகைய வங்கிக் கணக்குகளில் தொகையைப் பெறுவதற்கான உரிமை பெற்ற நபராக இவர்களது பெயரை அளிப்பதற்கான உரிமை போன்ற பயன்களை தன்பாலின திருமணம் செய்து கொண்ட தம்பதியினருக்கு இக்குழு அளித்திடவும் இவர் ஆலோசனை அளித்துள்ளார். மேலும், மருத்துவ நடைமுறைகளின்போது, சிறைச்சா லைக்கு சென்று கைதியைப் பார்ப்பதற்கு உற வினராகக் கருதப்படுவது, இறந்துபோன வாழ்க்கைத் துணையின் உடலைப் பெறு வதற்கும், இறுதிச் சடங்குகளை ஏற்பாடு செய்வதற்கான உரிமை ஆகியனவற்றை அளித்திடவும் ஆலோசனை அளித்துள்ளார். இருந்தபோதும், நீதிபதி பட் அவர்களது தீர்ப்பை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஹிமா கோலி மற்றும் நீதிபதி நரசிம்மா ஆகியோர் இத்தகைய வழிகாட்டுதல்களைக் கூட ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர்.
தற்போதுள்ள சட்டங்களின்படி, மாற்று பாலின உறவுகளில் இருக்கும் திருநங்கை களுக்குத் திருமணம் செய்துகொள்ள சுதந்திரமும் உரிமையும் உண்டு என்பதை தீர்ப்பு அங்கீகரித்துள்ளது.
நீதிபதி சந்திரசூட் அளித்த சிறுபான்மைத் தீர்ப்பில் ஒரு நல்ல நிவாரணம், திருமணமாகாத தம்பதிகள் (பால் புதுமையர் உட்பட) குழந்தை களைத் தத்தெடுக்கும் உரிமை ஆகும். சிறுபான்மைத் தீர்ப்பு திருமணமான மற்றும் திருமணமாகாத தம்பதிகள் உட்பட பால் புதுமைத் தம்பதிகளையும் உள்ளடக்கி ‘திரு மணம்’ என்ற வார்த்தையை விலக்கி, விதிமுறை 5(3)-ஐ வாசிக்க வலியுறுத்தியுள்ளது. தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி கௌலின் சிறு பான்மைத் தீர்ப்பும், கேரா (CARA) சுற்றறிக்கையின்படி, 2022-ல் சேர்ந்து வாழும் தம்பதிகள் தத்தெடுக்கத் தகுதியற்றவர்கள் என்று கூறியது, 15வது பிரிவை மீறுவதாகும் என்று குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், குழந்தைகள் தத்தெடுக்கும் இந்த உரிமையும் பெரும்பான்மைத் தீர்ப்பால் மறுக்கப்பட்டது.
இந்த தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக மட்டு மல்ல, பால் புதுமையர் (LGBTQ+) சமூகத்திற்கு உதவவும், நாட்டின் சமமான குடிமக்களாக அவர்களுக்கு தகுதியுள்ள உரிமைகளை வழங்கவும் நீதிமன்றம் தவறவிட்ட வாய்ப்பாகும் என்று ஜனநாயக மாதர் சங்கம் குறிப்பிடுகிறது. அரசு அமைக்கவுள்ள குழு பால் புதுமையர் சமூகத்திற்கு நம் நாட்டில் இதர தம்பதிகள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும் என்று ஜனநாயக மாதர் சங்கம் கோருகிறது.